Tuesday, April 21, 2009

திராச்டிக் பொலிடிசியன்

இன்றைய அரசியல்வாதிகளை பற்றிய ஒரு குறிப்பு


முதலில் நாம் விஜயகாந்தை பற்றி பார்ப்போம்
விருத்தாசலம் தொகிதியில் அதாவது பாட்டாளி மக்கள் கட்சி யின் கோட்டை யில் இருந்து சட்டமன்றத்துக்கு MLA ஆனவர். ஆனால் இன்று வரை அந்த தொகிதியில் எந்த ஒரு நல திட்ட உதவிகளையும் MLA என்ற முறையில் இது நாள் வரை எதுவும் செய்ய வில்லை, கேட்டால் என்னை எந்த ஒரு திட்டமும் செய்ய விடாமல் தடுகிரர்கள் என்று குற்றம் சாட்டுகிறார் ஆனால் இது நாள் வரை அது யார் என்று அவர் சொல்லாமல் இருக்கின்றார் இதில் இருந்து அவரும் ஒரு சாதாரண அரசியல் வாதி என்று மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். நேங்கலே சிந்தித்து பாருங்கள் விருதாச்சலத்தில் அவர் கூறிய தேர்தல் வாக்குறிதிகளை இன்று வரைக்கும் அவரால் எதையும் நிறைவு செய்ய முடியவில்லை, MLA ஆகா இருந்து மற்றும் கட்சியின் தலைவராக இருந்தும் கூட அவரால் ஏதும் செய்யமுடியாத நிலையில் அவர் கட்சி MP ஆகி என்ன செய்ய போகிறார்கள்


இப்போது சிதம்பரத்தை பற்றி
மத்திய மந்திரி பதவியை வைத்து கொண்டு தான் சார்ந்த தொகிதியை இது நாள் வரை இந்திய வரைபடத்தில் கூட பார்கதவர், இது நாள் வரை அவர் தொகிததுக்கு எந்த ஒரு நிதியும் சரியாக சென்று அடைந்தது இல்லை , இதில் இவர் நிதி அமைச்சர் இவர் அமெரிக்கா பல்கலைகழகத்தில் MBA பட்டம் பெற்றும் இந்தியாவுக்கு எந்த பயனும் இல்லை, செய்திதாளில் படித்தேன் இவர் 1996 தேர்தலில் தோல்வி அடைந்த போது நான் இந்திய என்னும் கண்ணாடி மூலமாக சிவகங்கை யை பார்த்தேன் ஆனால் இனி சிவகங்கை என்னும் கண்ணாடி மூலமாக இந்தியாவை பார்பேன் என்று கூறினார், பாவம் அவர் இன்று வரை அந்த கண்ணாடி கிடைக்காமல் அலைந்து திரிந்து கொண்டிரிகிறார். இவரின் சிறப்பு என்ன வென்றால் எதை பார்த்தாலும் அதுக்கு வட்டி போட்டு பார்பர் அதனால் தான் இன்று மக்கள் என்ன பொருளுக்கும் இப்படி வட்டிகட்டி வாழ்கிற அவல நிலை

கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் பேச்சு மட்டும் தான் இன்று வரை இந்தியாவை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆண்டது இல்லை அவர்கள் மிகவும் எளிமை அவர்கள் இந்த்யவையும் அப்படி மாற்றிவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது

BJP பற்றி என்றால் என்னகு தெரிந்து தமிழ் நாட்டில் அவர்கள் இல்லவே இல்லை
திருநாவுகரசர் போன்ற ஒரு சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் பிறர் மத வெறியர்கள் இது உண்மை, மோடி தலைமையிலான குஜராத் நல்ல முன்னேற்றங்களை சந்தித்து வருகிறது

Sunday, April 5, 2009

வாழைப்பழம் - நோய் நீக்கும் மருந்தாக

வாழைப்பழம் னு சொன்ன கவுண்டமனி செந்தில் தான்
நியாபகத்துக்கு வருவாங்க அதலு சில பல மருத்துவ குணங்கள் பற்றி............

வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு பலன்கள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தர கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகிறது. வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகிறது. இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்து கொள்ள உதவி செய்கிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்து கொள்ள பெரிதும் துணை செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல் படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.